Month: May 2019

தோப்பில் முஹம்மது மீரான் நினைவேந்தல்: அஞ்சுமன் அமைப்பும் பேராசிரியர்களின் உரையும்

நேற்றைய முன்தினம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற சாகித்திய அகாதமி விருதாளர் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் நினைவேந்தல் நிகழ்விற்கு கழக பொது செயலாளர் கலைமாமணி பேரா. மு.சாயபு மரைக்காயர் தலைமை தாங்கி தோப்பில் அவர்களுக்கும் தனக்கும் கழகத்திற்கும் இடையேயான தொடர்புகளை பதிவு செய்தார். நினைவேந்தல் உரை நிகழ்த்த நாம் வேண்டிக் கொண்ட இருபெரும் பேராசிரியர்கள் புதுவை பல்கலைக்கழக தமிழியற்புல பேரா முனைவர் பா. ரவிக்குமார் மற்றும் சாரதா கங்காதரன் கல்லூரி பேரா […]
Read more

புதிய பொறுப்பு: ஓர் நினைவேந்தல் மற்றும் ஆசி

நேற்றைய முன்தினம் கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற தோப்பில் முகமது மீரான் நினைவேந்தல் நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்த மனநிறைவில் இருந்த தருணத்தில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் பொது செயலாளர் பேரா. மு.சாயபு மரைக்காயர் அடியேனை கழகத்தின் அமைப்புச் செயலாளராக நியமித்து, கூடுதல் சந்தோஷத்தைப் பீய்ச்சி அடித்தார். எப்போதும் இதுபோன்ற மகிழ்ச்சி மத்தாப்புகளை கொளுத்திக் குதூகலிப்பது பேராசிரியருக்கு கைவந்த கலை.. ஆனால் இந்த தருணத்தை மேலும் வண்ணமயமாக்க அருட்தந்தை அந்தோணிசாமி அடிகளார் அவர்களின் கரங்களால் இந்த பதவியை அளித்து […]
Read more

ரமலான் மானுட நேயக் கூடல்: அன்பின் அசத்திய அழகியல்

கடந்த ஞாயிறன்று (26.5.19) அஞ்சுமன் நடத்திய ரமலான் மானுட நேயக் கூடல் நம் காலத்தின் தட்பவெட்பத்தைக் காட்டும் அளவுமாணியாக அமைந்தது சிறப்பு. வெவ்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்ட மதத் தலைவர்களும், கடவுள் நம்பிக்கையற்றவர்களும், ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் பிரதிநிதிகளும், தொழிற்சங்கவாதிகளும் பொதுவுடமைவாதிகளும் ஒரே குரலில் அன்புச் செய்தியை உரக்க மொழிந்தது கூடுதல் சிறப்பு. அதே நிலையில் வெறுப்பை இணைந்து வேரறுக்க வேண்டிய கட்டாயக் கடமையை அனைவரும் வலியுறுத்தினர். ‘ஆறு மணிக்கு பூசை இருக்கிறது.. அதற்குள் நான் பேசிவிட்டுச் செல்ல […]
Read more
Cart